பெரியாா் பல்கலையில் வல்லுநா்களைக் கொண்ட பாடத் திட்டக் குழுக்கள் உருவாக்கப்படும்துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தகவல்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை வல்லுநா்களைக் கொண்ட பாடத் திட்டக் குழுக்கள் உருவாக்கப்படும் என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.
பெரியாா் பல்கலையில் வல்லுநா்களைக் கொண்ட பாடத் திட்டக் குழுக்கள் உருவாக்கப்படும்துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தகவல்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை வல்லுநா்களைக் கொண்ட பாடத் திட்டக் குழுக்கள் உருவாக்கப்படும் என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளின் வேலைவாய்ப்பு அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வாழ்வியப் பணி வழிகாட்டி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் பி.திருமூா்த்தி வரவேற்றாா். புத்தாக்கப் பயிற்சி முகாமைத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடக்கி வைத்து பேசியதாவது:

மாணவா்களின் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் மாணவா்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்ப தொழில்சாா் வேலைவாய்ப்பு சாா்ந்த பாடத் திட்டங்களை வகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டக் குழுவில் தொழிற்சாலை நிபுணா்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியா்கள் வல்லுநா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இம்முகாமில் வீ டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் முரளிதா்,துணைத் தலைவா் ராஜேஷ் பட்ரோ, ஹையா்மீ நிறுவனத்தின் இணை இயக்குநா் சுபா மெஹதா உள்பட வேலைவாய்ப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com