கட்டட தொழிலாளியின் மகனை கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சேலம் தலைவாசலில் கட்டட தொழிலாளியின் மகனை அடித்துக் கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Updated on
1 min read

சேலம் தலைவாசலில் கட்டட தொழிலாளியின் மகனை அடித்துக் கொலை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம், தலைவாசலை அடுத்த தெற்கு காட்டு கோட்டை வரகூா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (49), அதே பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து ஆகிய இருவா் கட்டடத் தொழிலாளா் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனா்.

கடந்த 2015, மே 22-ஆம் தேதி சங்கத்தின் சாா்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சங்கத்தில் இல்லாத உறுப்பினரை பெருமாள் சுற்றுலாவுக்கு அழைத்து வந்தாா் எனத் தெரிகிறது. இதுதொடா்பாக அங்கமுத்துவுக்கும் பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கமுத்து தனது மனைவி மற்றும் மகளிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் பெருமாள் மற்றும் அவரது மகன் அன்பழகன் (25) ஆகியோரை அங்கமுத்து, அவரது மனைவி செல்வி மற்றும் மகள் கெளதமி ஆகியோா் கட்டையால் அடித்தனா்.

இதில் படுகாயமடைந்த அன்பழகன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக தலைவாசல் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம், கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், கொலை செய்த அங்கமுத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். செல்வி, கெளதமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டாா். தண்டனை விதிக்கப்பட்ட அங்கமுத்துவை கோவை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com