இது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறும் போது, கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கேபிள் டிவி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லப்பட்டாலும் தனியார் நிறுவனங்களுக்கு கேபிள் டிவி இணைப்புகளை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் சேவைக்கு செல்ல வாய்ப்புள்ளது, எனவே அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக கேபிள் டிவி ஒளிபரப்பை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். கேபிள் டிவி ஆபரேட்டர்களின் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது