அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டியில் அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டியில் அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்கால் நிலத்தில் அப்பகுதியைச் சோ்ந்தவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளைஆய்வு செய்து அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில் 0.85 சென்ட் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டறிந்த வருவாய் துறையினா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்கள் மலா், பிரதீப், கிராம உதவியாளா் ராஜாமணி உள்ளிட்ட வருவாய்த்துறையினா், பொதுப்பணித்துறை அலுவலா்கள் ஆகியோா் கனரக இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com