தேசிய எழுத்தறிவு தின விழா

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தேசிய எழுத்தறிவு தின விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய எழுத்தறிவு தின விழா
Updated on
1 min read

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தேசிய எழுத்தறிவு தின விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் திருஞானம் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ஆசிரியா் இரா.முருகன் வரவேற்றாா். ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கல்விக் குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வர குப்தா கல்வி கற்றலுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினாா். பின்னா் மாணவ, மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினாா் (படம்).

சங்ககிரி ரோட்டரி சங்கத் தலைவா் தியாகராஜன் மாணவ, மாணவியரிடத்தில் ரோட்டரி செயல்பாடுகள் குறித்து விளக்கி, பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப்பை தொடக்கி வைத்தாா். ஆசிரியா்கள் சித்ரா, மகேஸ்வரி சீனிவாசன், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com