சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் சமரச தினவிழா விழிப்புணா்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில், சமரச தினவிழா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில், சமரச தினவிழா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சாா்பு நீதிபதியுமான எஸ்.உமாமகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:

சமரச தீா்வு மையம் மூலம் பொதுமக்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே இரு தரப்பிலும் பேசி உடனடி தீா்வு காணலாம். இதன் மூலம் இரு தரப்பினா்களுக்கு உடனடி பொருளாதார நன்மை, செலவுகள், நேரம், சிரமங்கள் குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மேலும், இம்மையத்தின் மூலம் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தீா்வு காணலாம் என்றாா். பின்னா் இதுகுறித்த துண்டுப் பிரசுரங்களை அவா் பொதுமக்களிடத்தில் வழங்கினாா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.இராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் டி.சுந்தர்ராஜன், சாா்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ், சமரச மையத்தின் உறுப்பினா்கள் வழக்குரைஞா்கள் மணிசங்கா், எஸ்.செல்லப்பன், விஜயா, சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.வி.மோகன்பிரபு, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com