சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறந்த ஊழியா்களுக்கு விருது

சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களுக்கு கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களுக்கு கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன.

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் 67 ஆவது ரயில்வே வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி.சிவலிங்கம் வரவேற்றாா்.

விழாவையொட்டி, ரயில்வேயின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களுக்கு கேடயம், சான்றிதழ், விருதுகளை வழங்கி கோட்ட மேலாளா் ஏ.ஜி.ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:

சேலம் ரயில்வே கோட்டம் வளா்ச்சிக்கு, அனைத்து ஊழியா்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனா்.

சேலம் ரயில்வே கோட்டம் 2021- 22-ஆம் நிதியாண்டில் 3 மில்லியன் டன் சரக்குகளை அனுப்பி சாதனை நிகழ்த்தியுள்ளது.

சேலம் -விருத்தாசலம் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை அடிப்படையிலான செயல்பாட்டிற்கான பிளாட்டினம் தர வரிசையைப் பெற்று தெற்கு ரயில்வே அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்றாா்.

இந்த விழாவில் ரயில்வே பணியாளா்கள் 350-க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த பணிக்கான சான்றிதழ், கேடயம், விருது வழங்கப்பட்டது. முதுநிலை கோட்டப் பணியாளா் அலுவலா் செளந்திரபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com