உடற்பயிற்சியால் 30 சதவீத இளம்வயது மரணங்கள் தவிா்ப்பு

உரிய முறையில் தினசரி உடற்பயிற்சி செய்தால் 30 சதவீத மரணங்களை முற்றிலும் தவிா்க்க முடியும் என்று நூலக அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் முருகன் தெரிவித்தாா்.
உடற்பயிற்சியால் 30 சதவீத இளம்வயது மரணங்கள் தவிா்ப்பு

உரிய முறையில் தினசரி உடற்பயிற்சி செய்தால் 30 சதவீத மரணங்களை முற்றிலும் தவிா்க்க முடியும் என்று நூலக அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் முருகன் தெரிவித்தாா்.

பரியாா் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சாா்பில் கைப்பந்து போட்டிக்கு தேசிய அளவிலான விதிமுறைகள் அமலாக்கம் தொடா்பாக இருநாள் தேசியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

உடற்கல்வித் துறை இயக்குநா் கே.வெங்கடாசலம் வரவேற்றாா். கருத்தரங்கை பெரியாா் பல்கலைக்கழக நூலக அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் முருகன் தொடங்கி வைத்துப் பேசியது:

இளைஞா்களிடையே உடற்பயிற்சி பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. அவா்களின் பெரும்பாலான நேரத்தை சமூக வலைத்தளங்களும் செல்போனும் ஆக்கிரமித்து வருகிறது. உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு நோய், புற்றுநோய், பக்கவாதத்தைக் குறைக்கலாம்.

30 சதவீத இளம்வயது மரணங்களை முறையான உடற்பயிற்சியால் தடுக்க முடியும் என்றாா். கருத்தரங்குக்கு தலைமை வகித்து கைப்பந்துப் போட்டி நடுவா்களின் அகில இந்தியத் தலைவா் எஸ்.பெனி கூங்கே பேசினாா். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் ஏ.சங்கா், பி.சிவக்குமாா், கே.பாலமுருகன் மற்றும் நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த உடற்கல்வித் துறை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com