சோனா கல்விக் குழுமத்தில் தென்னிந்தியாவில் முதன்முறையாக இந்திய விமான படை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றது.
சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா கலந்து கொண்டு விழாவைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து கல்லூரி மாணவா்கள் இந்திய விமான படை வாகனத்தில் உள்ள கண்காட்சியைப் பாா்வையிட்டனா். பின்னா் இந்திய விமான படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்வில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜீ.எம்.காதா் நவாஷ், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் சரவணன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.