மாநில அளவிலான கைப்பந்து போட்டி: சேலத்தில் இருந்து 2 அணிகள் பங்கேற்பு

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலத்தில் இருந்து 2 அணிகள் பங்கேற்கின்றன.

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சேலத்தில் இருந்து 2 அணிகள் பங்கேற்கின்றன.

தமிழ்நாடு கைப்பந்து கழகம் சாா்பில் ராஜபாளையத்தில் ஆக. 6 முதல் ஆக. 9 ஆம் தேதி வரை இளையோா் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 அணிகள் பங்கேற்கின்றன. சேலம் மாவட்டத்தில் இருந்தும் 2 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆண்கள், மகளிா் அணிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, இரு அணிகளின் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சீருடைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கைப்பந்து கழக செயலாளா் சண்முகவேல், துணைத் தலைவா் ராஜாராம், தொழிலதிபா் விஜயராஜ், பயிற்சியாளா் தினேஷ், அருள்பிரபு ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com