ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சேலம் மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் எம்.சரவணன் தலைமையில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வசிஷ்டநதியில் ரசாயனம் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மணிவிழுந்தான் ஏரியில் பல லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. நதிநீரில் ரசாயனம் கலப்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முருகேசன், ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஆறுகள் வள மீட்பு தலைவா் மதுரை குருசாமி, டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் இளஞ்சீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈஸ்வா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.