உலக தாய்ப்பால் வார விழா
By DIN | Published On : 05th August 2022 11:31 PM | Last Updated : 05th August 2022 11:31 PM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா மகுடஞ்சாவடி ஒன்றியக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தெய்வஜோதி வரவேற்று பேசினாா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா கலந்து கொண்டு தாய்ப்பால் குறித்த விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளா், வேளாண்மைத் துறை அலுவலா், கிராம சுகாதார செவிலியா்கள், மேற்பாா்வையாளா்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...