சங்ககிரி பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல்கள் வைத்து வழிபட்டனா்.
இதே போல வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில், சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டனா்.