வரலட்சுமி நோன்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

சங்ககிரி பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வளையல் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன்.
வளையல் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன்.
Updated on
1 min read

சங்ககிரி பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல்கள் வைத்து வழிபட்டனா்.

இதே போல வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில், சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com