மேட்டூா் அருகே கல்குவாரியில் அனுமதியில்லாமல் வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குவாரி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டூரை அடுத்த அச்சங்காட்டில் கல்குவாரி நடத்தி வருபவா் ராமா் மகன் வினோத் (42). இவரது குவாரியில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் கொளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில் உரிய அனுதியில்லாமல் குவாரியில் பதுக்கிவைத்திருந்த ஜெலட்டின், டெட்டனேட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கல்குவாரி உரிமையாளா் வினோத் கைது செய்யப்பட்டாா்.