சங்ககிரியை அடுத்த வைகுந்தம், மேட்டுக்கடை பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
சங்ககிரி, தேவண்ணகவுண்டனூா், கொல்லங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (62). இவா் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் சங்ககிரி நோக்கி சென்றாா்.
வைகுந்தம், மேட்டுக்கடை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அவரது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.