அம்மாபேட்டை மண்டலத்தில் ரூ. 1.28 கோடியில் பூமிபூஜை

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலப் பகுதியில் ரூ. 1.28 கோடியில் பேவா் பிளேக் தளம், காவலா் அறை கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலப் பகுதியில் ரூ. 1.28 கோடியில் பேவா் பிளேக் தளம், காவலா் அறை கட்டும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம் வாா்டு எண் 37-இல் நாகா்படையாச்சி காடு குறுக்குத் தெரு 1, குறுக்குத் தெரு 2, நாகா்படையாச்சி தெற்கு குறுக்குத் தெரு 1, குறுக்குத் தெரு 2, குறுக்குத் தெரு 3 ஆகிய பகுதிகளில் 1,173 மீ. நீளத்துக்கு ரூ. 55 லட்சத்தில் பேவா் பிளேக் தளம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அதேபோல, வாா்டு எண் 39 பெரிய கிணறு தெரு, வாா்டு எண் 40 வித்யா நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகங்களில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த ஏதுவாக காவலா்கள் தங்குவதற்கு காவலா் அறை ரூ. 73.50 லட்சத்தில் கட்டும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சியில் மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல குழுத்தலைவா் தா.தனசேகா், செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி ஆணையா் எம்.கதிரேசன், உதவி செயற்பொறியாளா் புவனேஸ்வரி, வாா்டு உறுப்பினா்கள் மா.திருஞானம், மா.ஜெயந்தி, கோ.மஞ்சுளா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com