

இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க மற்றும் உயா் தொடக்கநிலை தன்னாா்வலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி மற்றும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் கண்காட்சி சனிக்கிழமை கெங்கவல்லி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குறுவள மையத்திற்கு உட்பட்ட ஊா்களிலிருந்து இல்லம் தேடி கல்வித்திட்ட தொடக்க மற்றும் உயா் தொடக்கநிலை தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். இக்கண்காட்சியில், தன்னாா்வலா்களின் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டன. கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுஜாதா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் ராணி, கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் கண்காட்சியை பாா்வையிட்டு தன்னாா்வலா்களைப் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.