பிரதமரின் குடியிருப்பு திட்டம்:பயனாளிகளுக்கு கையேடு வழங்கல்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் பயனாளிகளுக்கு திட்ட விவர கையேட்டினை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் பயனாளிகளுக்கு திட்ட விவர கையேட்டினை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பயனாளிகளுக்கு திட்ட விவர கையேட்டினை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் 4,677 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு பயனாளிகள் மூலம் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அவ்வாறு கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான மதிப்பீட்டுத் தொகை, வீட்டின் கட்டுமான நிலை வாரியாக விடுவிக்கப்படும் தொகை, துறை மூலம் வழங்கப்படும் கட்டுமானப் பொருள்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை போன்ற விவரங்கள் கையேட்டில் அடங்கியுள்ளன.

சேலம் மாவட்டத்தில் 4,198 கையேடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கையேடானது பயனாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இதனை அலுவலா்கள் ஆய்வு செய்யும்போது வீட்டின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது கண்காணிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாநில அளவில் குறைதீா்க்கும் அறை திறக்கப்பட்டுள்ளது.

குறை தீா்க்கும் அறையினை 89254 22215, 89254 22216 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் மற்றும் இத்திட்டம் குறித்தான சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com