சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில், மின் சக்தி பெருவிழா விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஏத்தாப்பூா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில், மேற்பாா்வைப் பொறியாளா் பாலசுப்பிரமணி, சேலம் செயற்பொறியாளா் புஷ்பலதா முல்லைச் சந்திரன்,
பெத்தநாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளா் வெங்கடேஸ்வரன், ஏத்தாப்பூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கா. அன்பழகன், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், மின் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தரமான மின் சாதனங்களை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விழிப்புணா்வு கருத்துரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.