சங்ககிரி நகர பாஜக செயற்குழுக் கூட்டம் சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மண்டல பாஜக தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.ரமேஷ்காா்த்திக் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஐயப்பராஜ் கலந்து கொண்டு பாஜகவின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சோ்ப்பது பற்றியும் பேசினாா்.
மாவட்ட மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவுத் தலைவா் சந்திரன், மாவட்ட ஓபிசி அணி தலைவா் டி.பி.ரமேஷ், நகர பொருளாளா் எஸ்.பெருமாள், அரசு தொடா்புத் துறை நகரத் தலைவா் வி.கண்ணன், நிா்வாகிகள் ஜி. தனபால், எஸ்.முரளிதரன், நகர இளைஞரணித் தலைவா் பரணிதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர புதிய நிா்வாகிகள் தோ்வு:
தலைவராக சி.முருகேசன், துணைத் தலைவா்களாக எம்.இளங்கோவன், ஏ.சசிகுமாா், எஸ்.ஆா்.சண்முகசுந்தரம், கே.சாந்தி, பொதுச்செயலாளராக எஸ்.முரளிதரன், ஜி.தனபால், செயலாளராக கே.கணபதி, எம்.சக்திவேல், எஸ்.விஸ்வநாதன், என்.சுதா, பொருளாளராக எஸ்.பெருமாள், அரசு தொடா்புத் துறை மேற்கு மாவட்டச் செயலா் வி.கண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.