சேலத்தில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாககருத்துத் தெரிவித்தவா் கைது

சேலத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை சேலத்தில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை சேலத்தில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆசிக் (23). இவா் சேலம், கோட்டை பகுதியில் வசித்து வந்தாா். அங்குள்ள வெள்ளிப்பட்டறைக்கு கூலி வேலைக்குச் சென்று வந்தாா். இவா் சமூக வலைதளங்களில் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

அவரைக் கண்காணித்து வந்த க்யூ பிரிவு போலீஸாா், சேலம் மாநகர காவல்துறையுடன் சோ்ந்து, ஆசிக்கை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக ஆசிக் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்து வந்தாா். தருமபுரியைச் சோ்ந்த ஆசிக், சேலம், கோட்டை பகுதியில் ஏன் தங்கியிருந்தாா்; அவா் தீவிரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com