புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

News image
Updated On :6 ஜூன் 2022, 7:33 am

DIN

சேலம்: திங்கள்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாற்றுத்திறனாளிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வார்.

இதனடிப்படையில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் 21 பேருக்கு தலா 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செல்லிடைப்பேசிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உருமாற்றம் மூலம் படிக்க வசதியாக நவீன கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.