சங்ககிரி, வி.என்.பாளையம், ஏரிக்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ சாண்முடீஸ்வரி அம்மன், ஸ்ரீ ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, சனிக்கிழமை சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள நல்ல கிணற்றிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக புனித நீா் எடுத்துச் சென்றனா்.
கணபதி, வாஸ்து பூஜைகள் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சுவாமி சிலைகளுக்கு கண் திறத்தல், யாக சாலை பூஜைகள் நடைபெற்று குடமுழுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனா்.