வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அம்மனுக்கு பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலம் நடத்தினர்.
வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்திலுள்ள பழமையான ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில், ரூ.50 லட்சம் செலவில் நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது.
இதையும் படிக்க: சுருளிமலை ஐயப்ப சுவாமிக்கு உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை
இதனையொட்டி, இரு தினங்களாக பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் சிகப்பு, மஞ்சள் நிற ஆடை அணிந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.