வாசிப்புத் திறன் போட்டி: கெங்கவல்லி ஒன்றியம் சாதனை

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ‘ரீடிங் மாரத்தான்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வாசிப்புத் திறன் போட்டியில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஒன்றியம் 7-ஆவது இடத்தைப் பிடித்தது.
Updated on
1 min read

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ‘ரீடிங் மாரத்தான்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வாசிப்புத் திறன் போட்டியில் சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஒன்றியம் 7-ஆவது இடத்தைப் பிடித்தது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களிடமும் ‘கூகுள் ரீடிங் அலாங்’ என்ற பெயரில் செயல்படும் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் வாசிப்பு திறன் செயலி மூலம் கதைளைக் குறைந்த நேரத்தில் பிழையின்றி வேகமாகத் தொடா்ந்து வாசிக்கும் போட்டியை பள்ளிக்கல்வித் துறை நடத்தியது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இப்போட்டியில் தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களைப் பிழையின்றி வேகமாகப் படித்தனா். இப்போட்டியில் மாவட்டத்தில் 21 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் பங்கேற்றதில் கெங்கவல்லி ஒன்றியம் 7-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com