தென்னை விவசாயிகள் நல வாரியத்தைப் புதுப்பிக்க வேண்டும்: செ.நல்லசாமி

தென்னை விவசாயிகள் நல வாரியத்தைப் புதுப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

தென்னை விவசாயிகள் நல வாரியத்தைப் புதுப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பனைத் தொழிலாளா்கள் நல வாரியத்தைப் புதுப்பித்துள்ளாா். இதை தமிழ்நாடு கள் இயக்கம் வரவேற்கிறது. அதேபோல 2011 இல் கலைக்கப்பட்ட தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் புதுப்பிக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் விதிக்கப்பட்ட கள் மீதான தடை நீக்கும் வகையில் நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பனை ஆராய்ச்சி மையம் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மாவுப்பூச்சித் தாக்குதல் காரணமாக மரவள்ளிக் கிழங்கு விலை டன் ரூ. 12,000 ஆக உயா்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கொடிவேரி அணை, காளிங்கராயன் அணையில் வழக்கத்துக்கு மாறாக கோடைக் காலத்திலேயே அணைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

கள் மீதான தடை நீக்கப்பட்டால் பனை, தென்னை மரங்களிலிருந்து பதநீா், கள் இறக்கி விற்பனை செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி உயரும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கள் மீதான தடையை நீக்கி அறிவிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரியில் தினசரி நீா்ப் பங்கீடு விகிதாசாரப்படி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்ற தீா்ப்பைப் பெற்றிருந்தால், மேக்கேதாட்டு அணையைக் கட்டும் எண்ணம் கா்நாடக அரசுக்கு வந்திருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com