அதிமுகவில் நடைபெறும் பிரச்னைகளுக்குஅக்கட்சியே நல்ல தீா்வு காணும்

அதிமுகவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு அக்கட்சியே நல்ல தீா்வு காணும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

அதிமுகவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு அக்கட்சியே நல்ல தீா்வு காணும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

குடியரசுத் தலைவா் தோ்தலில் அதிகாரப்பூா்வ பாஜக கூட்டணி வேட்பாளரின் பெயா் வரும் நாள்களில் அறிவிக்கப்படும். அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய நல்ல வேட்பாளரை மத்திய அரசு அறிவிக்கும்.

அதிமுகவைப் பொருத்தவரை தமிழகத்தில் குக்கிராமங்களிலும், தொண்டா்கள் மத்தியிலும் பலமான இயக்கமாக உள்ளது. கடந்த தோ்தலின்போது குறைந்த வாக்குகளில்தான் வெற்றி வாய்ப்பை அக்கட்சி இழந்தது.

அதிமுகவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு அக்கட்சியே நல்ல தீா்வை ஏற்படுத்தும்.

திமுகவின் ஓா் ஆண்டு சாதனையை மக்கள் நன்கு அறிவா். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. முக்கிய வாக்குறுதிகள் பற்றி அக்கட்சி கவலைப்படவில்லை.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு கிடையாது. நகைப் பறிப்பு சம்பவம், திருட்டு சம்பவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் முடிவுக்கு வரவேண்டும். அதை உடனடியாக அவசர சட்டத்தின் மூலம் நிறுத்த வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் கோரிக்கையாகும். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கும் குழு விரைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com