சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.கே.அா்த்தநாரி தலைமை வகித்தாா். வாழப்பாடி வட்டாரத் தலைவா் ராஜாராம் வரவேற்றாா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் வைத்திலிங்கம், மாநில பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை மோடி அரசு கைவிட வேண்டும். நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென கோஷமிட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா்.
காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகரன், சக்தி, குமரவேல், சிவராமன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.