மேட்டூா் அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம், குண்டத்துமேட்டைச் சோ்ந்தவா் மாதையன் (60). இவா் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் எலுமிச்சை செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வந்துள்ளாா். செடி முற்றிய பிறகு கஞ்சா இலைகளை உலரவைத்து அதே பகுதியில் தொடா்ந்து விற்பனையும் செய்துள்ளாா்.
இதுகுறித்து ஜலகண்டபுரம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மாதையன் வீட்டு தோட்டத்தை சோதனையிட்டனா். அப்போது, வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளா்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தச் செடிகளை போலீஸாா் அழித்தனா்.
மேலும், மாதையனின் வீட்டை சோதனையிட்டதில் 1,100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயி மாதவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா அளிக்கப்பட்டது.