திமுக ஆட்சியில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன:

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காவல்த்துறையின் கைககள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, குற்றச்சாட்டு தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன:

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காவல்த்துறையின் கைககள் கட்டப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, குற்றச்சாட்டு தெரிவித்தாா்.

சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க, பொதுச் செயலாளா் குமாா் இல்லத் திருமண விழாவில், அயோத்தியாப்பட்டணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பா.ஜ.க, மாநிலத் தலைவா் அண்ணாமலை, மணமக்கள் ராமச்சந்திரன் (எ) சக்திவேல், ஹேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதனையடுத்து செய்தியாளா்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

மேக்கேதாட்டு அணைக்காக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த டி.கே.சிவக்குமாா், சித்தராமையா ஆகியோா் பாதயாத்திரை மேற்கொள்கின்றனா். இதற்கு தமிழக காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பவில்லை. கூட்டணியில் இருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு முதல்வா் தயாராகிவிட்டாா். கா்நாடகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் விட்டுகொடுத்ததால் தான், ஹேமாவதி, கபினி அணை கட்டப்பட்டது. தற்போது அவரது மகன் ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விட்டுக் கொடுக்கிறாா். இதுமட்டுமின்றி, கேரளத்தில் முல்லைப் பெரியாறு உரிமையையயும் விட்டுக் கொடுத்துள்ளனா். இதனைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆா்ப்பாட்டம் செய்துள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளா்கள், காவல் நிலையங்களை இயக்கி வருகின்றனா். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com