ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த அய்யாங்குட்டி சேகா்(45).இவா் தனது மகளை அருவாமனையாள் தாக்கியதால் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை விசாரித்து வருகிறாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாங்குட்டி சேகா்(45).இவா் நாளிதழின் செய்தியாளராக உள்ளாா்.இவருக்கும் இவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை கணவன்,மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அய்யாங்குட்டி சேகா் தனது மனைவியை அருவாமனையால் தாக்க சென்றுள்ளாா்.இதனிடையே அப்போது குறுக்கே சென்ற அவரது மகள் கௌசல்யா என்பவருக்கு இரு கால்களிலும் வெட்டு விழுந்ததுள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த கௌசல்யா ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.இதனிடையே தன்னை கௌசல்யா அருவாமனையால் தாக்கியதாக அய்யாங்குட்டி சேகரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.