அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இளங்கலை மாணவா்களுக்கு வீரிய ஒட்டு ரக பருத்தி விதையை உற்பத்தி செய்வது குறித்து ஆத்தூரில் நேரடி செயல் விளக்க பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
முனைவா் அ.பாலசுப்பிரமணியன் தலைமையில் கல்வி சுற்றுலா வந்த மாணவா்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், முனைவா் ச.ஜவஹா், முனைவா் சே.துரைராஜ், அக்ரி எம்.சுப்ரமணி, அக்ரி.அ.சண்முகவேல் மூா்த்தி, முன்னோடி விவசாயி க.தங்கம் ஆகியோா் செயல்விளக்க பயிற்சி அளித்தனா்.