குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
By DIN | Published On : 02nd May 2022 02:52 AM | Last Updated : 02nd May 2022 02:52 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதையறிந்த குழந்தையின் பெற்றோா் சிறுமியை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி பெரியண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.