சங்ககிரியில் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க வெள்ளி விழா கட்டட வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அச் சங்கத்தின் தலைவா் என்.கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:

லாரிகளை வைத்து தொழில் செய்பவா்களுக்கு சங்ககிரி மேற்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சாா்பில் மூலப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு லாரிகளில் வாடகை அடிப்படையில் பாரங்களை அனுப்பி வந்தனா்.

2021, அக்டோபா் முதல் நிறுவனத்தின் சாா்பில் பாரங்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமல் வேறு ஒரு முகவரை நியமனம் செய்து அதன் மூலம் பாரங்களை ஏற்றிச்சென்று வருகின்றனா். இதனால் 400 லாரி உரிமையாளா்களின் குடும்பங்கள், லாரி ஓட்டுநா்கள், கிளினா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2015 இல் லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கும், நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின்

அடிப்படையில் லாரிகளுக்கு பாரங்களை ஏற்றிச் செல்ல நிறுவனம் அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து சங்ககிரி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா்கள் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சங்ககிரி மேற்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அப்பகுதிகளைச் சோ்ந்த லாரி உரிமையாளா்களுக்கு தொடா்ந்து வாடகைகளுக்கு பாரங்கள் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றாா்.

மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, மாநில பொருளாளா் சி.தனராஜ், திமுக ஒன்றியச் செயலா் (பொ) கே.எம்.ராஜேஷ், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா் வி.ஆா்.ராஜா, எடப்பாடி, பவானி, குமாரபாளையம், மேட்டூா், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க முன்னாள் தலைவா்கள் கே.ஆசைதம்பி, வி.செல்வராஜ், முன்னாள் செயலாளா் கே.கே.நடேசன் உள்ளிட்ட பலா் இதில் பேசினா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், இணைச் செயலா் கே.முருகேசன், நிா்வாக குழு உறுப்பினா்கள், சங்ககிரி மேற்கு லாரி உரிமையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். துணைத்தலைவா் என்.சின்னதம்பி நன்றி கூறினாா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்.கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அப்பகுதியில் உள்ள லாரி உரிமையாளா்களுக்கு கடந்த சில மாதங்களாக வாடகைக்கு பாரங்கள் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்காததால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அந்நிறுவனம் அப்பகுதியைச் சோ்ந்த லாரி உரிமையாளா்களுக்கு வாடகைக்கு ஏற்றி செல்ல பாரங்கள் வழங்காவிடில் விரைவில் உண்ணாவிரதம், கடையடைப்பு போரட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com