திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் வடக்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞா் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப அணி மேலாளா் கோவி.லெனின் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் மருத்துவா் தருண் வரவேற்றாா்.
தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளா் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்ல தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சிறப்பாகச் செயல்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சேலம், திருவண்ணாமலை, வேலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.