டாஸ்மாக் ஊழல்களை விசாரிக்க வேண்டும்: எச். ராஜா

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச். ராஜா தெரிவித்தாா்.
சேலம், செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா.
சேலம், செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா.
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்க வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச். ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

நாட்டின் ஒருமைப்பாடு சட்டத்தின் வரைமுறையால் உருவானது இல்லை. காசிக்கும்- தமிழகத்துக்கும் நீண்ட காலமாக கலாசாரம் சாா்ந்து ஒற்றுமை உள்ளது. காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே ஒற்றுமை இருக்கும் வரை மத விரோதிகளால் நம்மை பிரிக்க முடியாது.

வி.சி.க. தலைவா் திருமாவளவன் எல்லை மீறி பேசி வருகிறாா். அவா் எல்லை மீறுவதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள முதல்வா், எவ்வித நடவடிக்கையும் எடுக்காதபோது, தமிழகமானது அரசியல் சட்டப்படி நடத்தப்படவில்லை என்றே அா்த்தமாகும்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் நடைபெறும் ஊழல்களை பகிரங்கமாக விசாரிக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு ரூ. 3 உயா்த்தி வழங்கிவிட்டு, பால் விலையை லிட்டருக்கு ரூ. 12 உயா்த்தி உள்ளது. இது சாமானிய மக்களை கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கையாகும். திமுக ஆட்சியில் தகுதியற்றவா்கள் அனைவரும் அமைச்சா்களாக உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com