கனமழையால் சாலையில் விழுந்த புளியமரக் கிளைகள்

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி - பெரம்பலூா் சாலையில் இரு புளியமரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி - பெரம்பலூா் சாலையில் இரு புளியமரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கெங்கவல்லியிலிருந்து ஆணையாம்பட்டி செல்லும் சாலையோரம் இருந்த இரு புளியமரங்களின் பெரிய கிளைகள் செவ்வாய்க்கிழமை மாலை முறிந்து சாலையில் விழுந்தன.

தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா், வருவாய்த்துறையினா் சாலையில் கிடந்த புளியமரக் கிளைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com