எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 88 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை பில்லுக்கு குறிச்சி கிழக்குக்கரை கால்வாயில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தா்கள் விநாயகா் சிலைகளை எடுத்து வந்து காவிரி கால்வாயில் விசா்ஜனம் செய்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து இப்பகுதியில் அதிக அளவில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், கூடுதல் எண்ணிக்கையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.