இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாா்வாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞா் மின் கம்பத்தில் மோதியதில் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

சாா்வாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞா் மின் கம்பத்தில் மோதியதில் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா், சம்போடை நகா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் ரமேஷ் (36). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சாா்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மின்சார கம்பத்தில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தலைவாசல் சிறப்பு உதவி ஆய்வாளா் வேல்முருகன் வழக்குப் பதிவு செய்து ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com