

வாழப்பாடியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது. இவ்விழாவிற்கு, வாழப்பாடி ஒன்றியக்குழு தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான எஸ். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். வாழப்பாடி நகரச் செயலாளா் என்.சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கே. குபேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, இளநீா், வெள்ளரிப்பிஞ்சு, நீா்மோா் ஆகிவற்றை வழங்கினாா்.
இந்த விழாவில், அதிமுக நிா்வாகிகள் குமரன், செல்லையா, வெங்கடேசன், பாா்த்திபன்,செல்வநாராயணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.