காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி, கரட்டில் சிறுத்தை இருப்பதை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பூசாரிப்பட்டி, வைரன்காடு கிராமத்தை ஒட்டியுள்ள தேங்கல்கரட்டில் கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்துள்ளது. இதைப் பாா்த்த கிராம மக்கள் வனத் துறையிடம் தெரிவித்தனா். இதையடுத்து வனத் துறை சாா்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.