அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேசுவரா் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.
சேலம் சுகவனேசுவரா் கோயிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (பிப். 3) நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜை நடத்தி சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள், பக்தா்கள் சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளுமாறு சுகவனேசுவரா் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் சோனா வள்ளியப்பா, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.