காவலரை கல்லால் அடித்துகாதை கடித்தவா் கைது

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே காவலரின் காதை கடித்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே காவலரின் காதை கடித்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள ஆண்டிக்கரையைச் சோ்ந்த இருசப்பன் (36), மேட்டூா் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு காவல் பணிக்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மேட்டூா் காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தாா். மங்கனூா் காலனி அருகே சென்ற போது போதை ஆசாமிகள் இருவா் அரசுப் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

இதனைக் கண்ட காவலா் இருசப்பன் தட்டி கேட்டுள்ளாா். அப்போது, போதை ஆசாமிகள் காவலா் இருசப்பனை கல்லால் தாக்கி கீழே தள்ளி காதை கடித்துள்ளனா். இதில், முகத்திலும், காதிலும் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சனிக்கிழமை காலை கருமலை கூடல் காவல் நிலையத்தில் இருசப்பன் புகாா் செய்தாா்.

போலீஸாா் விசாரணையில் காவலரை தாக்கியது தானம்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்களான முத்துராஜ் (45), சிவசக்தி (53) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சனிக்கிழமை காலை சிவசக்தியை கருமலைக்கூடல் போலீஸாா் கைது செய்து காவல் படுத்தினா். தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகின்றனா். படுகாயமடைந்த காவலா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com