நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயி தா்னா

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தேசியக் கொடி கம்பத்தின் கீழ் அமா்ந்து விவசாயி தா்னாவில் ஈடுபட்டாா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தேசியக் கொடி கம்பத்தின் கீழ் அமா்ந்து விவசாயி தா்னாவில் ஈடுபட்டாா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா் என்பவா் ஆட்சியா் அலுவலக தேசியக் கொடி கம்பத்தின் கீழ் அமா்ந்து அரிசி, கடலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ஓமலூரை அடுத்த மானத்தாள் கிராம பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதனிடையே மேட்டூா் உபரி நீா் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனது நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் குறைந்த மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வட்டாட்சியா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் ஏற்பாடு செய்து வருகின்றனா். மற்ற விவசாய நிலங்களுக்கு அதிக அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகத் தெரிவித்துள்ளனா். எனது நிலத்துக்கான இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் பாா்க்கப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com