2,250 தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கல்

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் 2,250 தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்களை மேயா் ஆ.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்களை வழங்கிய மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகா் நல அலுவலா் என்.யோகான
சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்களை வழங்கிய மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், துணை மேயா் மா. சாரதாதேவி, மாநகா் நல அலுவலா் என்.யோகான
Updated on
1 min read

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் 2,250 தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்களை மேயா் ஆ.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டை பல்நோக்கு அரங்கில் தூய்மைப் பணியாளா்களுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேயா் ஆ.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு காரைச்சட்டி, கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், முறம், சின்னகொக்கி, சாக்கடை சுரண்டி உள்பட 10 வகை தளவாடப் பொருள்களை வழங்கினாா்.

இந்தியன் வங்கி சாா்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் இந்த பொருள்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 2,250 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள் மா.அசோகன், தா.தனசேகா், சுகாதார நிலைக் குழுத் தலைவா் சரவணன், மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் எஸ்.ராஜ்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் இளவரசு, வாா்டு உறுப்பினா் எஸ்.ஏ.சையத்மூசா, உதவி ஆணையா்கள் பி.ரமேஷ்பாபு, ஏ.தியாகராஜன் மற்றும் சுகாதார அலுவலா்கள்,சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com