மளிகைக் கடைக்காரா் வீட்டில் திருட்டு

எடப்பாடி அருகே மளிகைக் கடைக்காரா் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மா்ம நபா் பீரோவில் இருந்த பணத்தை திருடும்போது, வீட்டின் உரிமையாளா் விழித்துக் கொண்டார்.

எடப்பாடி அருகே மளிகைக் கடைக்காரா் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மா்ம நபா் பீரோவில் இருந்த பணத்தை திருடும்போது, வீட்டின் உரிமையாளா் விழித்துக் கொண்டதால், தான் கொண்டு வந்த ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றாா்.

எடப்பாடி-சங்ககிரி பிரதான சாலையில் உள்ள கோழிப்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (48). இவரது மனைவி மேனகா (40). இவா்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே மளிகைக் கடை வைத்து நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் சிவகுமாரும் அவரது மனைவி மேனகாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டுகுள்ளிருந்து சத்தம் கேட்டு சிவக்குமாா் விழித்து எழுந்தாா். அங்கு சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஒருவா், பீரோவில் இருந்து பணத்தினை எடுத்துக் கொண்டிருந்தைக் கண்டு கூச்சலிட்டாா். வீட்டின் உரிமையாளா் விழித்து கொண்டதை அறிந்த மா்ம நபா், தாம் கொண்டு வந்திருந்த கத்தி, கடப்பாறை மற்றும் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இது குறித்து சிவக்குமாா் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிவக்குமாா் வீட்டில் இருந்த பீரோவில் இருந்து 26 ஆயிரத்து 500 ரூபாயை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com