மேட்டூா் அணையில் எஸ்.பி. ஆய்வு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா்.
Updated on
1 min read

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) தண்ணீா் திறக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா்.

அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூா் அணையின் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விசையை இயக்கி குறுவை சாகுபடிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து விடுகிறாா்.

இதற்காக அணையின் வலது கரையில் நிகழ்ச்சி நடக்குமிடம், சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் தணிகாசலம்ஆகியோா் பாா்வையிட்டனா்.

நீா்வளத் துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு மற்றும் விழா மேடை அமையவுள்ள இடம் குறித்தும் ஆலோசனை செய்தாா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது நீா்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கும்.

அணையின் வலது கரையில் பாதுகாப்பு பணிக்காக ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரா்கள், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com