பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ஆத்தூா் நேதாஜிநகா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
Updated on
1 min read

ஆத்தூா் நேதாஜிநகா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

நரசிங்கபுரம், விநாயகபுரம் அடுத்துள்ள நேதாஜிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவரது மனைவி தனபாக்கியம் (60). இருவரும் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனா். இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது தனபாக்கியத்தின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி 3 பவுனை பறித்துச் சென்றனா். இதனையறிந்த அருகில் இருந்த இளைஞா் ஒருவா் தனது இருசக்கர வானகத்தில் சுமாா் 10 கி.மீ. தூரம் துரத்திச் சென்றாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com