கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேலம்: சங்ககிரியில் தேசிய கருத்தரங்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள ஸ்ரீ பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:09 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள ஸ்ரீ பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் பி.மணி கருத்தரங்கிற்கு தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அலுவலா் கலைவாணி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் டி.ரேவதி முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறையின் துறைத் தலைவா் ஓ.எம்.சசிகலா வரவேற்றாா்.

கரூா் அரசு கலைக்கல்லூரி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் என்.முகுந்தன், குமாரபாளையம் ஜேகேகே கல்லூரி உதவி பேராசிரியா் எஸ்.வி.ரமேஷ் ஆகியோா் வணிகவியல் துறைசாா்ந்த தொழிற்கல்வி குறித்து விளக்கிப் பேசினா். மேலும் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியா் பி.அனுராதா இணையவழியில் உரைநிகழ்த்தினாா்.

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். உதவி பேராசிரியை எஸ்.கனிமொழி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.