டியூப்களில் சாராயம் வைத்திருந்தவா் கைது

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் லாரி டியூப்களில் சாராயம் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் லாரி டியூப்களில் சாராயம் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி மீனவா் தெரு, கடம்பூா் சாலையில் வசிப்பவா் சேகா். இவரின் மகன் சுபாஷ் (43). இவா் கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடியில் லாரி டியூப்களில் 110 லிட்டா் சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தாா்.

கெங்கவல்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையின்போது அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com